நெடுங்கேணியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்
By: Nagaraj Wed, 02 Dec 2020 8:02:46 PM
கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்...
வவுனியா நெடுங்கேணியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் பணியாற்றியவர்கள் சிலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் சுகாதார பிரிவினரின் கடும் பிரயத்தனம் மற்றும் அர்ப்பணிப்பான சேவையினூடாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம்
மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டு உள்ளது.
இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே
செல்வதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிசிஆர்
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.