Advertisement

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

By: vaithegi Thu, 04 May 2023 11:43:57 AM

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில்,

நேற்று ஒரே நாளில் 419 பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 079 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

corona,treatment ,கொரோனா ,சிகிச்சை

இதில் அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கும், கோவையில் 33 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் 17 பேருக்கும், செங்கல்பட்டில் 12 பேருக்கும்,

இதனை அடுத்து மதுரையில் 11 பேருக்கும், திருப்பூரில் 8 பேருக்கும், திருவள்ளூரில் 7 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 10 நபர்களுக்கும் கீழ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.


Tags :
|