Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,001ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,001ஆக உயர்வு

By: Monisha Tue, 21 July 2020 1:30:48 PM

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,001ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 941 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

thiruvarur district,corona virus,infection,treatment,deaths ,திருவாரூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 941 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,001ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 647 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 5 பேர் பலி ஆகியுள்ளனர்.

Tags :