Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

By: Monisha Fri, 27 Nov 2020 2:25:36 PM

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் கொனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது.

corona,infection,increase,treatment,cure ,கொரோனா,தொற்று,அதிகரிப்பு,சிகிட்சை,குணம்

நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 731 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது தொற்று உள்ள 332 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 139 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Tags :
|