Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,484 ஆக உயர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,484 ஆக உயர்வு

By: Monisha Thu, 27 Aug 2020 10:28:30 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,484 ஆக உயர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக நேற்று 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ramanathapuram district,corona virus,infection,death,treatment ,ராமநாதபுரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 484 ஆக இருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 58 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 955 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

Tags :
|