திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,621 ஆக உயர்வு
By: Monisha Wed, 14 Oct 2020 10:36:42 AM
திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 8,621 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,621 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 82 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.