சீனாவில் கொரோனா மீண்டும் தாண்டவம்
By: vaithegi Fri, 16 Dec 2022 11:31:54 AM
சீனா: : சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அங்கு 15 நாட்களாக கொரோனா (ஒமைக்ரான்) அலை தாண்டவமாடத்தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் யாரையும் விட்டு விடவில்லை.
சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள், பீஜிங் தூதரக பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களிலும் கிளினிக்குகளிலும், ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
வாட்டியெடுக்கும் குளிருக்கு மத்தியிலும் நடைபாதை வரை நோயாளிகள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். பலர் கார்களுக்குள் படுத்துக்கொண்டே அவர்களுக்கு 'டிரிப்ஸ்' செலுத்தப்படுகிறது.
மேலும் இன்னும் பலர் கடுமையான காய்ச்சலுடன் கிளினிக்குகளின் வெளியே காத்திருக்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு வருகின்றன.