Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவும் இருக்கு... பன்றிக்காய்ச்சலும் இருக்காம்... வெளிநாடு சென்று வந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி

கொரோனாவும் இருக்கு... பன்றிக்காய்ச்சலும் இருக்காம்... வெளிநாடு சென்று வந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி

By: Nagaraj Mon, 01 Aug 2022 11:17:06 PM

கொரோனாவும் இருக்கு... பன்றிக்காய்ச்சலும் இருக்காம்... வெளிநாடு சென்று வந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி

திண்டுக்கல்: அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருகின்றனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொரோனா, குரங்கு அம்மை போன்ற பாதிப்புகளால் பக்கத்து மாநிலமான கேரளாவில் தொடர்ந்து சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் வயநாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதை அடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. எல்லைகளில் கேரள வாகனங்கள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தமிழகம் வர அனுமதிக்கப்படுகிறது.

sensation,palani,surveillance,swine fever,woman,abroad ,பரபரப்பு, பழனி, கண்காணிப்பு, பன்றிக்காய்ச்சல், பெண், வெளிநாடு

இந்நிலையில் அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தி சிகிச்சையளித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பழனியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்காவிற்கு சென்று உள்ளார்.

அமெரிக்காவில் பணி புரியும் தனது கணவருடன் சில காலம் இருந்துவிட்டு கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார். பழனிக்கு வந்த அந்தப் பெண் தஞ்சாவூரில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல விழாவிற்கு சென்று வந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் நான்கு தினங்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் பழனியில் உள்ள தனது வீட்டிற்கு உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு கொரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணை பழனி சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அமெரிக்கா சென்று வந்த பெண்ணிற்கு பன்றிக்காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி உள்ளது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|