Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதியானது

உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதியானது

By: Nagaraj Tue, 30 June 2020 8:38:07 PM

உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதியானது

அமைச்சருக்கு கொரோனா... உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை:

'தொடக்கத்தில் அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. அவரது சிடி ஸ்கேன் முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தது.

the minister,higher education,corona,is steadfast ,அமைச்சர், உயர் கல்வித்துறை, கொரோனா, உறுதியானது

தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்று முதல் அவருக்கு லேசான இருமல் இருந்தது. இதனால், இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது. தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்பழகனுக்கு கொரோனா இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதனை அமைச்சர் மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
|