மீண்டும் பரவ ஆரம்பிக்கும் கொரோனா... சீனா, தென்கொரியாவில்
By: Nagaraj Sun, 10 May 2020 9:04:14 PM
மீண்டும் பரவுகிறது கொரோனா... கடந்த சில நாட்களாக சீனா மற்றும் தென் கொரியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் பரவ துவங்கியுள்ளது, அந்நாட்டு அதிகாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா, உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் அந்நாட்டின் கடுமையான போராட்டங்களுக்கு இடையே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக அந்நாட்டில் ஒருவர், இருவர் என தினசரி கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இன்று மட்டும் 14 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. அதில் 11 பேர் ஜிலின் மகாணாத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் ஹூபெயை சேர்ந்தவர்கள். 11 பேரில் 45 வயதான பெண் மூலம் அவரது கணவர், சகோதரிகள் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பரவியுள்ளது.
அந்த பெண் வெளிநாடு சென்றதில்லை. அதேபோல் தென்கொரியாவிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் பரவ துவங்கியுள்ளது. இன்று மட்டும் அந்நாட்டில் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அங்கு 30க்கு மேல் கொரோனா உறுதி செய்யப்படுவது இது முதல்முறையாகும்.