Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி...ஒரே நாளில் 70 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி...ஒரே நாளில் 70 பேர் உயிரிழப்பு

By: Monisha Tue, 21 July 2020 09:18:46 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பலி...ஒரே நாளில் 70 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 861 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,உயிரிழப்பு,சிகிச்சை

மாவட்ட வாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:-
அரியலூர் - 1
செங்கல்பட்டு - 201
சென்னை - 1,456
கோவை - 22
கடலூர் - 9
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 22
ஈரோடு - 8
கள்ளக்குறிச்சி - 12
காஞ்சிபுரம் - 69
கன்னியாகுமரி - 20
கரூர் - 7
கிருஷ்ணகிரி - 10
மதுரை - 160
நாகை - 1
நாமக்கல் - 1
நீலகிரி - 2
பெரம்பலூர் - 2
புதுக்கோட்டை - 14
ராமநாதபுரம் - 50
ராணிப்பேட்டை - 15
சேலம் - 19
சிவகங்கை - 25
தென்காசி - 3
தஞ்சாவூர் - 16
தேனி - 32
திருப்பத்தூர் - 5
திருவள்ளூர் - 168
திருவண்ணாமலை - 32
திருவாரூர் - 1
தூத்துக்குடி - 25
திருநெல்வேலி - 11
திருப்பூர் - 5
திருச்சி - 39
வேலூர் - 28
விழுப்புரம் - 29
விருதுநகர் - 28
வெளிநாடு - 1

Tags :
|