- வீடு›
- செய்திகள்›
- உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்த நபர் கொரோனாவுக்கு பலி
உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்த நபர் கொரோனாவுக்கு பலி
By: Karunakaran Mon, 06 July 2020 10:26:52 AM
அமெரிக்கவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து அல்கொய்தா பயங்கரவாதிகள் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதல் காரணமாக சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மீது விமானத்தை கொண்டு மோதச்செய்து தாக்குதல் நடைபெற்றது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த 911 தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்து தப்பிஓடினர். அப்போது அசோசியேட் பிரஸ் நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இருந்து மக்கள் ஓடி வருவதையும், வர்த்தக மைய கட்டிடம் இடிந்து விழுவதையும் புகைப்படமாக எடுத்தார்.
இந்த புகைப்படம் உலகம் முழுவதும் செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பிரபலம் ஆனது. இந்த புகைப்படத்தில் கருப்பு சட்டை அணிந்திருந்த நபர் நியூயார்க்கை சேர்ந்த 60 வயதான ஸ்டிபர் கூப்பர் என்பதும், அவர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. அதன்பின் புளோரிடா மாகாணத்திற்கு இடம்பெயர்ந்த அவர், கொரோனா காரணமாக கடந்த மார்ச் 28 ஆம் தேதியே உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.