Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காததால் முதல்-மந்திரி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த கொரோனா நோயாளி

ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காததால் முதல்-மந்திரி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த கொரோனா நோயாளி

By: Karunakaran Fri, 17 July 2020 12:58:53 PM

ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காததால் முதல்-மந்திரி வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த கொரோனா நோயாளி

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளை படுக்கை வசதி இல்லை என கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் இருக்கும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பெங்களூரு பனசங்கரி அருகே அம்பேத்கர் நகரில் வசிக்கும் ஒரு நபருக்கும், அவரது மனைவி, 2 குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர் குடும்பத்துடன் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு படுக்கை வசதி இல்லை என கூறி வேறு ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி கூறி விட்டனர். ஆம்புலன்சில் தங்களை வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி மாநகராட்சிக்கு அந்த நபர் தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வரவே இல்லை.

corona patient,hospital,treatment,karnataka ,கொரோனா நோயாளி, மருத்துவமனை, சிகிச்சை, கர்நாடகா

இந்நிலையில், நேற்று மதியம் அந்த நபர் தனது மனைவி, 2 குழந்தைகளை அழைத்து கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பாவின் காவேரி இல்லத்திற்கு வந்தார்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம், தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அங்கிருந்த போலீசார் சிதறி ஓடிவிட்டனர்.

முதல்-மந்திரி வீட்டுக்கு எதிரே உள்ள சாலையில் அந்த நபர் தனது மனைவி, குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்ததை சுதாரித்து கொண்ட போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், அந்த நபர், அவரது மனைவி, 2 குழந்தைகளையும் ஆம்புலன்சில் ஏற்றி மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைத்து சென்று அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags :