- வீடு›
- செய்திகள்›
- பிரசவ வார்டு அருகில் கொரோனா நோயாளிகள் அனுமதி; எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மறியல்
பிரசவ வார்டு அருகில் கொரோனா நோயாளிகள் அனுமதி; எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மறியல்
By: Nagaraj Tue, 14 July 2020 10:54:01 AM
கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் மறியல்... அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த 18 பேரை திடீரென்று பிரசவ வார்டின் அருகில் உள்ள கட்டடத்தில் அனுமதித்ததால், பிரசவ வார்டில் உள்ள கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த 18 பேரை பிரசவ வார்டின் அருகில் உள்ள புதிய கட்டடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நோயாளிகள் ராணியார்பேட்டை மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீரென அவர்களை இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட பிரசவ வார்டில் இருந்த கர்ப்பிணிகளின்
பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை
அனுமதிக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி
மருத்துவமனை பகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இங்கு
பிரசவசம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பரபரப்பான சூழல்
உருவானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை
நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்ப்பதாக தெரிவித்தனர்.