இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதி
By: Nagaraj Tue, 02 June 2020 3:47:15 PM
ஒரே நாளில் 8171 பேருக்கு கொரோனா... இந்தியாவில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இன்று (ஜூன் 2) காலை 9:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,598 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.