கொரோனா பரவலால் 30க்கும் அதிகமான போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்
By: Nagaraj Fri, 17 July 2020 6:00:21 PM
பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்... ஹோமாகம – நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் பிரிவில் பெண் சார்ஜண்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பொலிஸார் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்பது பொலிஸ் அதிகாரிகளும், நான்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும்
ஹபராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், 13 பொலிஸாரும் ஐந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் அத்திட்டிய
தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில்
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்த மேலும் ஐவர் இன்று
குணமடைந்துள்ளனர். இதற்கமைய இதுவரையில் மொத்தமாக இரண்டாயிரத்து 12 கொரோனா
தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் இரண்டாயிரத்து 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.