கனடாவில் மார்ச் மாதத்திற்கு பின்னர் முதல்முறையாக கொரோனா பாதிப்பு குறைவு
By: Nagaraj Thu, 02 July 2020 4:14:23 PM
மார்ச் மாதத்திற்கு பின்னர் கனடாவில் கொரோனா பாதிப்பு முதல்முறையாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 67பேர் பாதிப்படைந்ததோடு, 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கடந்த மார்ச் 14ஆம் திகதிக்கு (54 தொற்றுகள்) பிறகு, முதல்
முறையாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கொரோனா
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை
வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 4,271 பேர் பாதிப்படைந்ததோடு,
8,615பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 27,912 பேர்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 67,744 பேர் பூரண குணமடைந்து
வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,103பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக
இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.