புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ளது
By: vaithegi Fri, 07 Apr 2023 11:59:05 AM
புதுச்சேரி: இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 1 நாள் பாதிப்பு எண்ணிக்கை 5,000 – ஐ கடந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி கொண்டு வருகிறது. மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதனை அடுத்து இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணிகள், புதிய கட்டுப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் வல்லவன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.