Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 228 ஆக உயர்வு

நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 228 ஆக உயர்வு

By: Monisha Thu, 25 June 2020 6:33:08 PM

நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 228 ஆக உயர்வு

நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக 67,468 அதிகரித்துள்ளது.

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு 37,763 பேர் குணமடைந்துள்ளனர்.

nagai district,coronavirus,influence,treatment,kills ,நாகை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. இதில் 90 பேர் குணமடைந்துள்ளனர். 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :