Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா ஒரே நாளில் மட்டும் 596 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

கர்நாடகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா ஒரே நாளில் மட்டும் 596 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

By: vaithegi Wed, 15 June 2022 10:16:48 AM

கர்நாடகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா ஒரே நாளில் மட்டும்  596 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

பெங்களூரு : பெங்களூரு: கடந்த சில நாள்களாவே பல்வேறு இடங்களில் கொரோனா மீண்டும் தலைதூக்கிறது . இதனை அடுத்து கர்நாடகத்தில் நேற்று மட்டும் 18 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக 596 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 582 பேர் பாதிக்கப்பட்டனர்.

தட்சிண கன்னடாவில் 4 பேர், பல்லாரியில் 2 பேர், பெலகாவி, பெங்களூரு புறநகர், கொப்பல், சிவமொக்கா, உடுப்பி, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். 21 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை.

corona,virus,corona test ,கொரோனா ,வைரஸ் ,கொரோனா பரிசோதனை

இதுவரை 6 கோடியே 66 லட்சத்து 39 ஆயிரத்து 421 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 39 லட்சத்து 57 ஆயிரத்து 343 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்றும் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 66 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 400 பேர் வந்தனர். இதனையடுத்து அவர்கள் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து 13 ஆயிரத்து 353 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்து 882 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு 3.14 சதவீதமாக உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கி வருவது சுகாதாரத்துறையினரை பெரும் அதிர்ச்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags :
|
|