கொரோனா ஆபத்து இன்னும் நீங்கவில்லை... விசேட மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
By: Nagaraj Sun, 17 May 2020 10:27:16 AM
கொழும்பு: ஆபத்து இன்னும் நீங்கவில்லை... இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை என தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவி்த்துள்ளார்.
இதன் காரணமாக மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் மாற்றங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி வரும் சுகாதார விசேட நிபுணர்களின் எச்சரிக்கையின் அடிப்படையில், சர்வதேச தொலைக்காட்சி ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
Tags :
corona |
risk |