Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Tue, 04 Apr 2023 3:54:07 PM

நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியா: 3038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி .... இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|