சென்னையில் கொள்ளையன் வாயிலாக 6 போலீசாருக்கு பரவிய கொரோனா
By: Nagaraj Sat, 06 June 2020 8:31:45 PM
கொள்ளையன் மூலம் போலீசாருக்கு பரவிய கொரோனா... சென்னையில் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் 6 பேருக்கு கொள்ளையன் ஒருவன் மூலம் கொரோனா பரவி உள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கொள்ளையன் ஒருவனை கைது செய்தனர்.
அவன் அளித்த தகவல் மூலம் மற்றொருவனையும் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் சிறை நிர்வாகத்தினர் நடத்திய சோதனையில் கைதான கொள்ளையன் ஒருவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கும் சோதனை நடத்தப்பட்டது. அதில் இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆறு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.