Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா!

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா!

By: Monisha Sat, 25 July 2020 2:50:51 PM

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,277 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 1,556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ranipettai,tiruppattur,corona,prevalence,treatment ,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,கொரோனா,பாதிப்பு,சிகிச்சை

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 61 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 1,843 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 2,112 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 778 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 26 ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

Tags :
|