Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு... சோதனைச்சாவடியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு... சோதனைச்சாவடியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

By: Monisha Tue, 13 Oct 2020 12:41:23 PM

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு... சோதனைச்சாவடியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

குமரி மாவட்டத்தின் அருகாமையில் கேரள மாநிலம் அமைந்துள்ளது, தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்கிறது.

கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் பாதைகள் முதலில் அடைக்கப்பட்டு இருந்தன. தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் குமரி- கேரள எல்லை வழிப்பாதைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் கேரளாவில் இருந்து களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வருபவர்கள் மற்றும் இ-பாஸ் பெற்று வருபவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

kerala,corona virus,check post,testing,health department ,கேரளா,கொரோனா வைரஸ்,சோதனைச்சாவடி,பரிசோதனை,சுகாதாரத்துறை

இந்தநிலையில் கேரளாவில் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து களியக்காவிளை பாதையைத்தவிர குமரி மாவட்டத்துக்கு வரும் பிற கேரள வழிப்பாதைகள் அனைத்தையும் மூட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.

மேலும் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த வழிப்பாதைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. களியக்காவிளை வழியாக கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் நாள் ஒன்றுக்கு 150 முதல் 300 பேருக்கு களியக்காவிளை சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறார்கள்.

Tags :
|