Advertisement

புதுச்சேரியை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா

By: Nagaraj Mon, 10 Apr 2023 8:28:07 PM

புதுச்சேரியை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் கரோனா தொற்று மிரட்டத் துவங்கியுள்ளது.இதையடுத்து அங்கு புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதுவையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.

சுகாதாரத்துறையும் கரோனா பரிசோதனைகளை அதிகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று புதுவை மாநிலத்தில் 827 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதனை அடுத்து இதில் புதுவையில் 55 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேயில் 2 பேர் என மொத்தம் 82 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் புதுவையில் 7 பேர், காரைக்காலில் 2 பேர் என்று மொத்தம் 9 பேர் மருத்துவமனையிலும், 262 பேர் வீட்டு தனிமையிலும் என்று மொத்தம் 271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

corona,puducherry,intimidation,treatment,fatality,corrimade , கொரோனா   ,புதுச்சேரி, மிரட்டுகிறது, சிகிச்சை, உயிரிழப்பு, கோரிமேடு

அதைத்தொடர்ந்து 15 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது ஜிப்மரில் ஒருவரும், கோரிமேடு மார்பக மருத்துவமனையில் 2 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேரும் சிகிச்சயைில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் புதுவையில் கடந்த சில தினங்களாகவே கரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆனால், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் யாரும் முகக்கவசம் அணிவதை அரசு தரப்பில் கண்டுகொள்ளாத போக்கும் நிலவுகிறது.

Tags :
|