Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே நாளில் டில்லியில் 1298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

ஒரே நாளில் டில்லியில் 1298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

By: Nagaraj Wed, 03 June 2020 09:01:37 AM

ஒரே நாளில் டில்லியில் 1298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

ஒரே நாளில் 1298 பேருக்கு கொரோனா... டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22,132 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

delhi,health department,same day,1298 persons,corona ,
டெல்லி, சுகாதாரத்துறை, ஒரே நாள், 1298 பேர், கொரோனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.132 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
|