ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 2127 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Wed, 20 May 2020 10:38:13 AM
ஒரே நாளில் 2127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.
மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 2127 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 37,136 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1325 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :
corona |
victim |
victims |