தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 978 பேருக்கு கொரோனா
By: Nagaraj Sun, 25 Oct 2020 8:44:12 PM
978 பேருக்கு தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 978 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 978 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,31,252-ஆக
அதிகரித்துள்ளது. இதில் கொரோனா தொற்றால் 19,465 பேர் சிகிச்சை பெற்று
வரும் நிலையில், 16,430 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று
(சனிக்கிழமை) ஒருநாளில் மட்டும் 27,055 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள
நிலையில், மொத்தமாக 40,79,688 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாக
4 பேர் பலியானதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,307-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.