Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா

சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா

By: Nagaraj Sun, 27 Sept 2020 5:56:45 PM

சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா

சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

private hospital,corona,executive committee meeting,symptom ,தனியார் மருத்துவமனை, கொரோனா, செயற்குழு கூட்டம், அறிகுறி

இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதி ஆனது.

இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|