Advertisement

கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

By: Nagaraj Tue, 15 Sept 2020 08:38:40 AM

கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படை அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த போராடியும் குறைந்தபாடில்லை. மேலும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பவில்லை.

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். மற்றவர்கள் குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபை கூடுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

mla geeta,corona,loneliness,home,doctor ,எம்எல்ஏ கீதா, கொரோனா, தனிமை, வீட்டில், மருத்துவர்

அதன்படி, கடந்த 12ஆம் தேதி கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதாவின் உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் கீதா எம்.எல்.ஏ. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சென்னையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்திற்கு செல்லாமல் இருந்தார். நேற்று காலை மீண்டும் கீதா எம்.எல்.ஏ., கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நெரூரில் உள்ள தனது வீட்டில் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

Tags :
|
|