Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற மேலும் ஒரு நாட்டின் தலைவருக்கு கொரோனா

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற மேலும் ஒரு நாட்டின் தலைவருக்கு கொரோனா

By: Karunakaran Sat, 19 Dec 2020 08:23:34 AM

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற மேலும் ஒரு நாட்டின் தலைவருக்கு கொரோனா

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெட்ஸ்டெக்ஸ், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஜ்ஜீஸ், லக்சம்பர் பிரதமர் சேவியர் பெட்டல், ஸ்லோவேக்கியா பிரதமர் ஐஹோர் மடோவிக், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர் உர்சுலா வெண்டர் லியன் உள்ளிப்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருமல் உள்ளிட்ட சில அறிகுறிகள் மேக்ரானுக்கு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது.

corona virus,president,eu countries,slovakia ,கொரோனா வைரஸ், ஜனாதிபதி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஸ்லோவாக்கியா

இதனால் மேக்ரான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேக்ரானின் மனைவி ப்ரிஹிடி மேக்ரனும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களும் கொரோனா பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால், கூட்டத்தில் பங்கேற்ற பலரும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

தற்போது கூட்டத்தில் ஸ்லோவேக்கியா நாட்டின் பிரதமர் ஐஹோர் மடோவிக் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. கொரோனா உறுதியானதையடுத்து ஐஹேர் மடோவிக் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். பிரதமர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் எனவும் ஆனாலும், அவர் தனது அலுவலகப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என ஸ்லோவேக்கியா அரசு தெரிவித்துள்ளது.

Tags :