மத்திய இணை அமைச்சர் கிருஷன் பால் குர்ஜருக்கு கொரோனா
By: Nagaraj Fri, 28 Aug 2020 10:54:26 AM
மத்திய இணை அமைச்சருக்கு கொரோனா.... மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிருஷன் பால் குர்ஜருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்தவரிசையில் தற்போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிருஷன் பால் குர்ஜர் இணைந்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு உடல்நலக்குறைவு
ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தனக்கு கொரோனா
இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்
படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.