கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 47,912 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக முழு தகவல்
By: Monisha Wed, 15 July 2020 09:26:34 AM
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.
நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதில் விமானநிலையம் மற்றும் ரெயில் நிலைய கண்காணிப்பில் 671 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் - 73
செங்கல்பட்டு - 2,688
சென்னை - 15,814
கோவை - 1,131
கடலூர் - 405
தர்மபுரி - 156
திண்டுக்கல் - 289
ஈரோடு - 248
கள்ளக்குறிச்சி - 823
காஞ்சிபுரம் - 2,539
கன்னியாகுமரி - 1,050
கரூர் - 57
கிருஷ்ணகிரி - 102
மதுரை - 4,199
நாகை - 199
நாமக்கல் - 106
நீலகிரி - 150
பெரம்பலூர் - 13
புதுக்கோட்டை - 306
ராமநாதபுரம் - 725
ராணிப்பேட்டை - 836
சேலம் - 993
சிவகங்கை - 434
தென்காசி - 496
தஞ்சாவூர் - 305
தேனி - 1,212
திருப்பத்தூர் - 188
திருவள்ளூர் - 3,005
திருவண்ணாமலை - 1,352
திருவாரூர் - 307
தூத்துக்குடி - 1,359
திருநெல்வேலி - 989
திருப்பூர் - 130
திருச்சி - 724
வேலூர் - 1,744
விழுப்புரம் - 669
விருதுநகர் - 1,425