Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஷர்ஜூல் இமாமுக்கு கொரோனா பாதிப்பு

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஷர்ஜூல் இமாமுக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Wed, 22 July 2020 08:50:41 AM

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஷர்ஜூல் இமாமுக்கு கொரோனா பாதிப்பு

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

அப்போது, போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனான ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவன் ஷர்ஜீல் இமாம் தேசத்திற்கு விரோதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்தியாவில் இருந்து அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற அவரது சர்ச்சை பேச்சு வெளியாகியதால் அவர் கைது செய்யபட்டார்.

corona prevalence,sharjul imam,imprison,corona virus ,கொரோனா பாதிப்பு, ஷார்ஜுல் இமாம், சிறை, கொரோனா வைரஸ்

ஷர்ஜூல் இமாம் மீது டெல்லி, அசாம், அருணாச்சலப்பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசத்துரோக வழக்கில் கைதான இமாம் அசாம் மாநிலத்தின் கவுகாத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது.

தற்போது, கவுகாத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜூல் இமாமுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தி மத்திய சிறைச்சாலையில் 338 கைதிகளுக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இமாம் சிறையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags :