Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாலாயிரத்தை கடந்தது!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாலாயிரத்தை கடந்தது!

By: Monisha Tue, 28 July 2020 12:38:00 PM

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாலாயிரத்தை கடந்தது!

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 3,963 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 343 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.

nellai district,corona virus,number of infections,treatment,mortality ,நெல்லை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு எண்ணிக்கை,சிகிச்சை,உயிரிழப்பு

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 3,963 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,500 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 343 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,312-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லை மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :