Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

By: Karunakaran Fri, 10 July 2020 11:47:16 AM

கொரோனா வைரஸ் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் மட்டுமே இந்த மூளை பாதிப்பை அதிக அளவில் பார்க்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு கொரோனாவின் முதல் அறிகுறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

coronavirus,brain damage,respiratory problem,scientist ,கொரோனா வைரஸ், மூளை பாதிப்பு, சுவாச பிரச்சனை, விஞ்ஞானி

மேலும், கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளையில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், இந்த மூளை பாதிப்பு நீண்டநாள் பிரச்சினையாக மாறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா நோயுடன் தொடர்புடைய கடுமையான சுவாச பிரச்சினைக்கான அறிகுறிகளை காட்டாவிட்டால் கூட, அவர்களுக்கு பக்கவாதம், நரம்பு பாதிப்பு மற்றும் ஆபத்தான மூளை வீக்கம் போன்ற நரம்பியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags :