கடலூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Tue, 23 June 2020 5:17:59 PM
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 823 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 823 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று மேலும் 60 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 883ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் இதுவரை கொரோனாவுக்கு 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளை மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.