Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்வு

By: Monisha Sat, 03 Oct 2020 12:25:08 PM

இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் வருகிறது. கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது புதிய பாதிப்புகள் குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்தை நெருங்கியது. மொத்த பாதிப்பு 64,73,545 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 79,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,069 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்ந்துள்ளது.

india,corona virus,infection,treatment,kills ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,27,707 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 75628 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,44,996 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.56 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 83.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.78 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 7,78,50,403 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 11,32,675 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

Tags :
|