Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 17 June 2020 11:17:42 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 768 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக 1500-க்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று 1,515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், இதுவரை இல்லாத அளவிற்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இறந்தவர்களில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். நேற்று ஒரே நாளில் 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.

coronavirus virus,tamil nadu,death,infection,thiruvannamalai district ,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,பலி,பாதிப்பு,திருவண்ணாமலை மாவட்டம்

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 768 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 793 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|