Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பரிசோதனைகளை அதிகரித்தால் இந்தியா, சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் - டிரம்ப்

பரிசோதனைகளை அதிகரித்தால் இந்தியா, சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் - டிரம்ப்

By: Karunakaran Sun, 07 June 2020 11:05:12 AM

பரிசோதனைகளை அதிகரித்தால் இந்தியா, சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் - டிரம்ப்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அமெரிக்க நாட்டில்தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகமெங்கும் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் 1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்கர்கள் ஆவர்.

அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மைனே மாகாணத்தில் உள்ள பியூரிட்டன் தொழிற்சாலையை பார்வையிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனா நிலவரம் குறித்து பேசினார்.

corona virus,united states,india,us president trump ,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,இந்தியா,அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அப்போது பேசிய அவர், நாம் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை செய்திருக்கிறோம். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை செய்கிறோமோ, அந்த அளவுக்கு தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவிலும் சரி, சீனாவிலும் சரி, பிற இடங்களிலும் சரி அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தால், அங்கேயெல்லாம் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டம், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தேசத்தின் மிகப்பெரியதொரு போராட்டம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை தோற்கடிக்க அமெரிக்க நிர்வாகம் மற்றும் அமெரிக்க தொழில்துறையின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி உள்ளோம்.நிச்சயமாக கொரோனா ஒரு எதிரிதான். இது சீனாவில் இருந்துதான் வந்துள்ளது. இதை சீனாவில் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். ஆனால் இதை அவர்கள் செய்யவில்லை என்று கூறினார்.

Tags :
|