கர்நாடகாவில் அதிகரிக்கிறது கொரோனா பாதிப்பு
By: Nagaraj Sun, 08 Nov 2020 2:27:49 PM
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது;
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,258 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,44,147 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,369 ஆக அதிகரித்துள்ளது. மேலும்
மாநிலம் முழுவதிலும் 33,320 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமன்றி தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து 7,99,439பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.