Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு

By: Karunakaran Mon, 03 Aug 2020 1:55:04 PM

கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 532 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்புடைய 74,590 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 57 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

corona virus,karnataka,chief minister,eduyurappa ,கொரோனா வைரஸ், கர்நாடகா, முதலமைச்சர், எடியூரப்பா

இந்நிலையில் முதல் மந்திரி பிஎஸ் எடியூரப்பா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது நலமுடன் உள்ளேன். டாக்டர்களின் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஆவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அம்மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags :