சூர்யா தேவிக்கும், கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனா பாதிப்பு
By: Nagaraj Sun, 26 July 2020 5:47:09 PM
நடிகை வனிதா அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவிக்கும், அவரை கைது செய்த பெண் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை வனிதா பீட்டர் பாலுடன் செய்து கொண்ட திருமணத்தை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். ஏற்கனவே, திருமணம் ஆன பீட்டர் பால், விவகாரத்து செய்யாமலேயே இன்னொரு திருமணம் செய்து விட்டதாகக் கூறி, அவரது மனைவிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாக பேசி வருகின்றனர்.
அப்படி, பேசியவர்களில் ஒருவரான சாலிகிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் சூர்யா தேவி. இவர் நடிகை வனிதாவை அசிங்கம் அசிங்கமாக திட்டி, சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். இதற்கு வனிதாவும் பதிலடி கொடுத்து வந்தார். இதையடுத்து, இருவரும் போலீசில் பரஸ்பர புகார் அளித்தனர்.
அதன்பேரில், இருவரையும் அழைத்து போலீசார் இதுபோன்று வீடியோக்களை வெளியிடக் கூடாது எனக் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஆனால், சூர்யா தேவி நடிகை வனிதாவை திட்டி வீடியோ வெளியிடுவதை
நிறுத்தவில்லை. இதனால், சூர்யா தேவியை போலீசார் கைது செய்து, கொலை
மிரட்டல், பெண்ணை ஆபாசமாக திட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
செய்தனர்.
தொடர்ந்து, அவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த
நிலையில், சூர்யா தேவிக்கும், அவரை கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனா
உறுதியாகியுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட சூர்யாதேவி தற்போது தலைமறைவாகி
விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாதேவி கைதானபோது
நடிகை வனிதா மற்றும் பல காவலர்கள் காவல்நிலையத்தில் உடனிருந்ததாக தகவல்
கூறப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.