Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது .. மா.சுப்பிரமணியன்

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது .. மா.சுப்பிரமணியன்

By: vaithegi Thu, 27 Apr 2023 4:29:19 PM

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது  ..  மா.சுப்பிரமணியன்

சென்னை : தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறைந்து கொண்டு வருகிறது.

எனவே கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் எந்த வித அச்சப்பட தேவையில்லை. மேலும் தொற்று பரவலை கையாள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது.

ma. subramanian,corona ,மா.சுப்பிரமணியன் ,கொரோனா

குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து மாவட்ட சுகாதார அலுவர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் குட்கா விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை பற்றி தகவல்கள் கொடுத்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தகவல் தருபவர்களின் ன் ரகசியம் காக்கப்படும். குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்கிறது. இத்தடையை மீறி விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Tags :