Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கணிசமாக குறைந்து வரும் கொரோனா... மக்கள் நிம்மதி பெருமூச்சு

கணிசமாக குறைந்து வரும் கொரோனா... மக்கள் நிம்மதி பெருமூச்சு

By: Nagaraj Sun, 27 Nov 2022 4:03:27 PM

கணிசமாக குறைந்து வரும் கொரோனா... மக்கள் நிம்மதி பெருமூச்சு

புதுடில்லி: மக்கள் நிம்மதி பெருமூச்சு... இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

343 cases,corona virus,decrease,india, ,இந்தியா, கொரோனா பாதிப்பு , ம்ககள், குறைந்தது, பலி

நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 4,46,71,562 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,263 ஆக குறைந்துள்ளது.

நேற்று 4 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 5,30,612 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதம். நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.90 கோடி.

Tags :
|