Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆகஸ்ட் 5 வரை தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும் - பாஜக எம்.பி. கருத்து

ஆகஸ்ட் 5 வரை தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும் - பாஜக எம்.பி. கருத்து

By: Karunakaran Sun, 26 July 2020 9:30:11 PM

ஆகஸ்ட் 5 வரை தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும் - பாஜக எம்.பி. கருத்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் இதுவரை 13 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா காரணமாக இதுவரை 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி தொடங்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தினமும் 5 முறை அனைவரும் அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.


corona virus,hanuman mantra,bjp,pragya singh tagore ,கொரோனா வைரஸ், அனுமன் மந்திரம், பிஜேபி, பிரக்யா சிங் தாகூர்

இதுகுறித்து பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் அனைவரும் இணைந்து கொரோனா வைரஸ் ஒழியவும், மக்கள் நலமுடன் இருக்கவும் ஆன்மீக வழியில் முயற்சிகளை மேற்கொள்ளோம். ஜூலை 25 முதல் ஆகஸ்5 வரை உங்கள் வீடுகளில் தினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள். இந்த பூஜையின் முடிவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கடவுள் ராமருக்கு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

.மேலும் அவர், மக்கள் அனைவரும்... நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் ஒன்றாக அனுமன் மந்திரத்தை கூறும்போது அது நிச்சயம் வேலை செய்யும். நாம் கொரோனா வைரசில் இருந்து விடுபட்டுவிடுவோம்.. இது கடவுள் ராமருக்கான உங்கள் பிராத்தனை என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|