Advertisement

தமிழகத்தில் மறுபடியும் உச்சத்தை அடையும் கொரோனா

By: vaithegi Mon, 03 Apr 2023 10:13:53 AM

தமிழகத்தில் மறுபடியும் உச்சத்தை அடையும் கொரோனா

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ... தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 909 ஆக அதிகரித்துள்ளது.

அதைத்தொடர்ந்து நேற்று கொரோனாவில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 99 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கும், செங்கல்பட்டில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,chennai ,கொரோனா ,சென்னை

சேலத்தில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 15 பேருக்கும், கன்னியாகுமரி 10 பேருக்கும், திருவள்ளூரில் 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேருக்கும்,

இதனை அடுத்து கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், வேலூர், விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|