Advertisement

தமிழ்நாட்டில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா

By: vaithegi Sat, 22 Apr 2023 09:53:37 AM

தமிழ்நாட்டில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 528 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,660 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனாவில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 492 ஆக உள்ளது.

இதையடுத்து அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 108 பேருக்கும், கோவையில் மட்டும் 54 பேருக்கும், செங்கல்பட்டில் மட்டும் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருப்பூரில் தலா 30 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,chennai ,கொரோனா,சென்னை

சேலத்தில் மட்டும் 28 பேருக்கும், ராணிப்பேட்டையில் மட்டும் 24 பேருக்கும், திருவள்ளூரில் மட்டும் 23 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று திண்டுக்கல்லில் 17 பேருக்கும், திருச்சியில் 15 பேருக்கும், மதுரையில் 14 நபர்களுக்கும், கிருஷ்ணகிரியில் 12 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தென்காசி, தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 11 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 10க்கும் கீழ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|