- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 239 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 239 ஆக அதிகரிப்பு
By: Monisha Tue, 09 June 2020 10:19:24 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகம் நோய்த்தொற்றில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எணணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் முதன்முறையாக 1500-ஐ தாண்டியது.
நேற்றும் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,239 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக்தில் நேற்று 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதம் மூலம் 17,527 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட அளவில் முதல் பத்து இடங்களில் கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னை - 23,298
செங்கல்பட்டு - 1,988
திருவள்ளூர் - 1,386
காஞ்சிபுரம் - 534
திருவண்ணாமலை - 503
கடலூர் - 491
திருநெல்வேலி - 390
விழுப்புரம் - 384
அரியலூர் - 381
தூத்துக்குடி - 355